TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, January 20, 2013

"பெத்தவன்' நூல் வெளியீட்டு விழா

First Published : 21 October 2012 10:45 AM IST
எழுத்தாளர் இமயம் எழுதிய பெத்தவன் நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம் சார்பில் கலைகளும் சமூகமும் எனும் தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இதில், எழுத்தாளர் இமயம் எழுதிய பெத்தவன் எனும் நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலர் ச.தமிழ்செல்வன் நூலை வெளியிட விஜய் தொலைக்காட்சி "நீயா நானா' நிகழ்ச்சியின் இயக்குநர் அந்தோணிராஜ், எவிடன்ஸ் நிர்வாக இயக்குநர் கதிர் ஆகியோர் பெற்று கொண்டனர்.
நூலை வெளியிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலர் ச.தமிழ்ச்செல்வன் பேசியது: பெத்தவன் எனும் இந்த நூலை மிகக் குறைந்த விலைக்கு அச்சடித்து தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும். "கலைகளும் -சமூகமும்' எனும் அடிப்படையில் கல்வி, குடும்பம், மதம், ஊடகம், ஜாதி உள்ளிட்ட தலைப்புகளில் பண்பாட்டுத் தளம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் இமயம் வரவேற்றார். அரசு ஆதிதிராவிடர் நல ஆசிரியர் காப்பாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.பாக்கியராஜ் தலைமை ஏற்றார். திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கவிஞர் கரிகாலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு ஜீவானந்தம், சங்க மாவட்டத் தலைவர் ஜீவகாருண்யன், ஆசிரியர் வே.தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர்கள் ரத்தின.புகழேந்தி, அமிர்தராசு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்ட பொருளர் மாய.முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலர் த.சீ.இளந்திரையன் நன்றி கூறினார்.

Friday, January 18, 2013

முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு நீதிமன்றம் உத்தரவு


தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது.
ஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும்,  இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா,  கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு 25 புதிய விடுதிகள் ஜெயலலிதா உத்தரவு


சென்னை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 83 லட்சம் செலவில் புதிதாக 25 விடுதிகள் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள்
தமிழகத்தில் தற்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,277 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 40 பழங்குடியினர் விடுதிகளும், 299 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக அதிக அளவில் மாணவ, மாணவியர் கல்வி கற்பதற்கு முன்வருவதாலும், இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளதாலும், மாணவ, மாணவியர் தங்கி பயிலுவதற்கு அதிக விடுதிகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான புதிய விடுதிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
25 புதிய விடுதிகள்
2012–13–ம் நிதியாண்டில் 16 பள்ளி விடுதிகள், 8 கல்லூரி விடுதிகள், 1 ஐ.டி.ஐ விடுதியும் என மொத்தம் 25 புதிய விடுதிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஸ். கொடிக்குளம், ராஜபாளையம், அரச்சநல்லூர், எஸ்.புங்கம்பாளையம், கருமந்தக்குடி, தேவக்கோட்டை, ஆத்தூர், தோப்பூர், நெய்கொப்பை, குமராட்சி, பெரியசாமிபுரம், கடம்பன்குளம், ஒஸ்.ஓகையூர், கல்லாக்கோட்டை, சுப்ரமணியபுரம், விராலிமலை, உதகமண்டலம், திருச்சி, உடுமலைப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, நன்னிலம், திருப்பத்தூர், அரக்கோணம், புதுக்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். இதில் ஒரு விடுதிக்கு 50 மாணவ, மாணவியர் வீதம் 1,250 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு பயன் அடைவார்கள்.
75 பணியிடங்கள்
இந்த விடுதிகளை பராமரிக்க ஒரு விடுதிக்கு பட்டதாரி காப்பாளர், காப்பாளினி பணியிடம் 1, சமையலர் பணியிடம் 1, காவலர், ஏவலர் பணியிடம் 1 என 3 பணியிடங்கள் வீதம் 25 விடுதிகளுக்கு 75 பணியிடங்களை தோற்றுவிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.புதிதாக தொடங்கப்பட உள்ள 25 விடுதிகளுக்கு அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.3 கோடியே 33 லட்சத்து 3 ஆயிரத்து 600–ம், தொடரா செலவினமாக ரூ.49 லட்சத்து 93 ஆயிரத்து 750–ம் என மொத்தம் ரூ.3 கோடியே 82 லட்சத்து 97 ஆயிரத்து 350 செலவு ஏற்படும்.
இரண்டு அடுக்கு கட்டில்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 68 கல்லூரி மாணவர் விடுதிகளில் 7,828 மாணவர்களும், 61 மாணவியர் விடுதிகளில் 4,738 மாணவியர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன் பெறும் வகையில், அவர்களுக்கு இரண்டு அடுக்கு கட்டில்கள் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 68 கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 7,828 மாணவர்களுக்கு 3,932 கட்டில்களும், 61 கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 4,588 மாணவியர்களுக்கு 2,313 கட்டில்களும் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடியே 28 லட்சத்து 1 ஆயிரத்து 475 நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மின்னணு எடை இயந்திரம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை சரியாக அளக்க, அனைத்து விடுதிகளுக்கும், உண்டி உறைவிடப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.5 ஆயிரம் விலையில் ஒரு மின்னணு எடை இயந்திரம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதற்காக ரூ.80 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார குட்டை தகளி
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 466 மாணவியர் விடுதிகள், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 16 மாணவியர் விடுதிகள், 100 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆக மொத்தம் 582 விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி பயிலும் மாணவியர்களின் உடல் நலத்தைப் பேணவும், விடுதியின் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்கவும், ஒவ்வொரு விடுதிக்கும், உண்டி உறைவிடப் பள்ளிக்கும் ஒரு சுகாதார குட்டை தகளி (நாப்கின் இன்சினிரேட்டர்) வழங்கவும், அதற்காக ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Monday, January 7, 2013

பணி நியமனம், பதவி உயர்வு: இரட்டை பட்டப்படிப்புக்கு தடை



T




சிவகங்கை: 
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் ஒரே ஆண்டில் இரட்டை பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அந்த தகுதி அடிப்படையில், நேரடி நியமனம் செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், தொடக்க கல்வித்துறையில் பல்வேறு தொகுப்பு வழக்குகள் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் 2012 ஆகஸ்ட் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து பல்கலை.,களில் ஏற்கனவே பட்டம் பெற்ற ஒருவர், இரட்டை பட்டப்படிப்பு மூலம் ஓராண்டில் (2 பட்டபடிப்பு) பெறும் பட்டத்தை 3 ஆண்டு பட்ட படிப்பிற்கு இணையாக கருத முடியாது. எனவே, பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இத்தகுதிகளை ஏற்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி : கல்வி மலர்