நாமக்கல்:
ஆதிதிராவிடர் நலத்துறையில் மாணவர்களுக்கு வழங்குவதாக கூறி, ரூ. 81 லட்சத்தை கல்வித்துறை அலுவலர்கள், 75 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டணி சேர்ந்து மோசடி செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிட மாணவ&மாணவிகள் பயன் அடையும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2010, 2011ம் ஆண்டுகளில் கல்லூரி மாணவ&மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை வழங்கியதில் ஒரு கோடிக்கு ரூபாய்க்கு முறைகேடு நடந்தது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையில் நடந்துள்ள மற்றொரு மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்விஉதவித் தொகையில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்கும்படி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
கல்வி உதவித்தொகையை பள்ளிகளுக்கு வழங்கியதில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கூட்டு சேர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் மோசடி செய்துள்ளனர். பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் பெயரையும் சுகாதாரமற்ற தொழில்புரியும் பெற்றோரின் குழந்தைகள் என துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்து அதை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கொடுத்து பணம் பெற்றுள்ளனர். இந்த பணத்தை இரு தரப்பினரும் பங்குபோட்டுள்ளனர். குழந்தைகளுக்கு வழங்கியதாக மோசடியாக பட்டியல் தயார் செய்து ஏ.இ.ஓ. அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மோசடிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் துணைபோய் உள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் குமரகுருபரன் கூறியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறையில் நடந்துள்ள இந்த மோசடி அதிர்ச்சி அளிக்கிறது. அரசு பணத்தை அரசுத்துறை அதிகாரிகளே கூட்டணி சேர்ந்து கையாடல் செய்துள்ளனர். கடந்த 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த நவம்பர் மாதம் ஆதிதிராவிடர்நலத்துறைக்கு புரபோசல் அனுப்பி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தான் இதற்கான பணம் அரசிடம் இருந்து வந்துள்ளது. அதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயருக்கு செக் கொடுத்துள்ளனர். 75 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சுகாதாரமற்ற தொழில்புரியும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் ரூ 81 லட்சத்துக்கு செக் போடப்பட்டுள்ளது.
இந்த பணம் பள்ளி குழந்தைகளை சென்றடையவில்லை என்பது தற்போது நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளையும் சுகாதாரமற்ற தொழில்புரியும் பெற்றோரின் பட்டியலில் சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் குமரகுருபரன் கூறினார்.
முதல்கட்டமாக 3 பள்ளி ஆசிரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். மோகனூர் பேட்டபாளையம் ஆர்.சி பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ், கபிலர்மலை யூனியன் பள்ளபாளயம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறையில் மாணவர்களுக்கு வழங்குவதாக கூறி, ரூ. 81 லட்சத்தை கல்வித்துறை அலுவலர்கள், 75 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கூட்டணி சேர்ந்து மோசடி செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிட மாணவ&மாணவிகள் பயன் அடையும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2010, 2011ம் ஆண்டுகளில் கல்லூரி மாணவ&மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை வழங்கியதில் ஒரு கோடிக்கு ரூபாய்க்கு முறைகேடு நடந்தது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறையில் நடந்துள்ள மற்றொரு மோசடி தற்போது அம்பலமாகி உள்ளது.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் சுகாதாரமற்ற தொழில் புரியும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்விஉதவித் தொகையில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்கும்படி மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
கல்வி உதவித்தொகையை பள்ளிகளுக்கு வழங்கியதில் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் கூட்டு சேர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் மோசடி செய்துள்ளனர். பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் பெயரையும் சுகாதாரமற்ற தொழில்புரியும் பெற்றோரின் குழந்தைகள் என துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் தயாரித்து அதை ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கொடுத்து பணம் பெற்றுள்ளனர். இந்த பணத்தை இரு தரப்பினரும் பங்குபோட்டுள்ளனர். குழந்தைகளுக்கு வழங்கியதாக மோசடியாக பட்டியல் தயார் செய்து ஏ.இ.ஓ. அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மோசடிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் துணைபோய் உள்ளனர்.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் குமரகுருபரன் கூறியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறையில் நடந்துள்ள இந்த மோசடி அதிர்ச்சி அளிக்கிறது. அரசு பணத்தை அரசுத்துறை அதிகாரிகளே கூட்டணி சேர்ந்து கையாடல் செய்துள்ளனர். கடந்த 2010, 2011 ஆகிய இரு ஆண்டுகளுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடந்த நவம்பர் மாதம் ஆதிதிராவிடர்நலத்துறைக்கு புரபோசல் அனுப்பி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தான் இதற்கான பணம் அரசிடம் இருந்து வந்துள்ளது. அதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயருக்கு செக் கொடுத்துள்ளனர். 75 பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சுகாதாரமற்ற தொழில்புரியும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் ரூ 81 லட்சத்துக்கு செக் போடப்பட்டுள்ளது.
இந்த பணம் பள்ளி குழந்தைகளை சென்றடையவில்லை என்பது தற்போது நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளையும் சுகாதாரமற்ற தொழில்புரியும் பெற்றோரின் பட்டியலில் சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் குமரகுருபரன் கூறினார்.
முதல்கட்டமாக 3 பள்ளி ஆசிரியர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். காரைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். மோகனூர் பேட்டபாளையம் ஆர்.சி பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ், கபிலர்மலை யூனியன் பள்ளபாளயம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment