TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Wednesday, August 8, 2012

விறகு சேகரிக்காத மாணவியருக்கு விடுதியில் "டிபன் கட்'


வேலூர்: 
அடுப்பு எரிக்க விறகு பொறுக்கி வராததால், 40 மாணவியரை, பட்டினி போட்ட சம்பவம், காட்பாடி அருகே நடந்தது. இதனால், ஐந்து மாணவியர் மயக்கம் அடைந்தனர்.

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டை அக்ரஹாரத்தில், அரசு ஆதி திராவிடர் பெண்கள் விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள, 40 மாணவியர், காட்பாடி அரசு பெண்கள் மேல் நிலை பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு, கல்வி, சாப்பாடு செலவு அனைத்தையும் அரசு வழங்கி வருகிறது. நேற்று காலை, டிபன் செய்யவில்லை. "ஏன் டிபன் செய்யவில்லை' என,மாணவியர் கேட்ட போது, "அடுப்பு எரிக்க விறகு இல்லை. அதனால் டிபன் செய்யவில்லை. நீங்கள் விறகு பொறுக்கி கொண்டு வந்தால் தான், சமையல் செய்ய முடியும்' என, தற்காலிக சமையல் காரர் சரஸ்வதி கூறினார்.
பட்டினி: இதை கேட்ட மாணவியர், செய்வதறியாமல் திகைத்து நின்றனர். ஐந்து மாணவியர், பசியைப் பொறுத்தபடி பள்ளி சென்றனர். மற்ற மாணவியர், விடுதியில் தங்கிவிட்டனர். விடுதியில் தங்கியவர்களில், ஐந்து மாணவியர் மயக்கம் போட்டு விழுந்தனர். இதைப் பார்த்த மற்ற மாணவியர், விடுதியை விட்டு வெளியே வந்து, அங்கிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். சமூக சேவகர் சேகர் பாபு, விடுதி வார்டன், ஜெயந்திக்கு, போன் மூலம் தகவல் தெரிவித்தார். "டிபன் போடாமல் மாணவியரை சித்திர வதை செய்வதா?' எனக் கேட்டனர். வெளியில் இருந்து டிபன் வாங்கித் தர ஏற்பாடு செய்வதாகக் கூறிய ஜெயந்தி, மாணவியரை உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் விறகு கொண்டு வரப்பட்டு, மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவியரை பட்டினி போட்டது குறித்து, அப்பகுதியினர், ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணை: மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரிகள் மாணவியரிடம் விசாரணை நடத்தினர். தினம் அடுப்பு எரிக்க விறகு பொறுக்கி கொண்டு வரும்படி, சமையல்காரர்,வார்டன் ஆகியோர் கூறுவதாக, மாணவியர் குற்றம் சாட்டினர். வார்டன் ஜெயந்தி கூறுகையில், ""ஒவ்வொரு வாரமும் விடுதிக்கு தேவைப்படும் விறகு, ஞாயிற்றுக்கிழமை வந்து விடும். ஆனால், விறகு மண்டிகாரர் விபத்தில் சிக்கிக் கொண்டதால், விறகு வந்து சேரவில்லை. இப்போது, இந்த பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது,'' என்றார்.

No comments:

Post a Comment