நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உயர் கல்வியின் தரம் உயர வேண்டும் என்ற அடிப்படை உண்மை நமது அரசியல் தலைவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.
நவீன உலகின் பொருளாதாரச் சூழ்நிலை கடந்த காலத்தைப் போல்தான் என நம்மில் பலர் நினைக்கிறோம். அதாவது, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி உற்பத்தி பெருகி ஏற்றுமதி அதிகரித்து அதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்ற நம்பிக்கை.
இந்த வகையான பொருளாதார முன்னேற்றம் இக்காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமல்ல என்பதை ஐரோப்பாவின் பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றையச் சூழ்நிலையில் விஞ்ஞான முறையிலான புதிய கண்டுபிடிப்புகள், நிர்வாக நடைமுறைகளில் மாற்றங்கள் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. இவை உருவாக ஒரு நாட்டின் உயர் கல்வி நிலையங்களும், கல்லூரியின் ஆராய்ச்சித் துறைகளும் மிகவும் சிறப்புடன் செயல்பட வேண்டும்.
ஆசியாவில் நமது முன்னேற்றத்துடன் போட்டியிடும் நாடுகள் சீனா, சிங்கப்பூர், தைவான் மற்றும் தென் கொரியா எனலாம். நாம் உற்பத்தி செய்யும் ஒரு பொருளை மேலைநாடுகளில் விற்பனை செய்ய முயலும்போது அதே பொருளை நம்மைவிடக் குறைந்த விலைக்கு மற்றொரு நாடு அங்கே விற்க முயன்றால் அதுவே இருநாடுகளுக்கான பொருளாதாரப் போட்டியாகிறது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் நாட்டின் பின்னணியில் அந்நாட்டின் உயர் கல்வி நிலையங்களும், ஆராய்ச்சித் துறைகளும் இருக்கும். அங்கு உருவாகும் படிப்பாளிகளும், விஞ்ஞானிகளும் புதிய கண்டுபிடிப்புகளையும், பொருள்களை உற்பத்தி செய்யும் புதிய நடைமுறைகளையும் உருவாக்குகிறார்கள்.
2008-ம் ஆண்டு "லண்டன் டைம்ஸ்' பத்திரிகை நடத்திய ஓர் ஆராய்ச்சியின்படி உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் சீனா, தென் கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா மூன்று பல்கலைக்கழகங்களும் தைவான், இந்தியா ஆகிய நாடுகளில் தலா ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெற்றன.
ஆக, நம்மைவிட அதிக அளவில் உயர் கல்வியில் முன்னேறிய மூன்று நாடுகள், நமக்குச் சரிசமமாக ஒரு மிகச் சிறிய நாடு எனும் பரிதாபமான நிலைமை.
21-ம் நூற்றாண்டில் உலகின் தலைசிறந்த உயர் கல்விக்கான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய நாடுகளில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடம் இந்தியாவுக்கே. இதுபோல் உலகின் மூன்றாவது இடத்தை நம் நாடு பிடித்ததற்கு நமது நாட்டின் ஆங்கிலக் கல்வி முறையும் மிக அதிக அளவில் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து பட்டம் பெறுவதும்தான் காரணமாயிருந்தது.
எனினும், நமது மக்கள்தொகையைக் கணக்கிலெடுத்தால், இந்தியாவின் இளைஞர்களில் 10 சதவிகிதமே உயர் கல்வியில் சேர்ந்து பட்டம் பெறுகிறார்கள். ஆனால், சீனாவில் 15 சதவிகிதத்தினரும் பல மேலைநாடுகளில் 60 சதவிகித இளைஞர்களும் உயர் கல்வி பயில்கிறார்கள். உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒருபுறம், அவற்றின் தரம் மற்றொருபுறம் என்ற உண்மையை நமது அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்பது விஷயம் தெரிந்தவர்களின் அறிவுரை.
நமது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சரியான நிதி வசதி இல்லாமலும் நிறைய உள்பூசல்களுடன் சரியாக நிர்வகிக்கப்படாத நிலைமையிலும் இயங்குகின்றன என்பது ஒரு கசப்பான உண்மை. சரியான நிதி வசதியின்மையால் கல்லூரியின் நூல் நிலையங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், வகுப்பறைகள்வரை தரமில்லாமல் உள்ளன. நிறைய ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன; தாற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து நமது கல்லூரிகள் இயங்குகின்றன.
பல்கலைக் கழகத் துணைவேந்தர்களின் நியமனம் அரசியல் அடிப்படையில் நடக்கின்றது. மாணவர்கள் மத்தியில் ராகிங் தொடங்கி அடிதடி சண்டைகள் வரை போகிறது; ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் ஆரம்பிப்பதால் கல்வி கற்கும் சூழ்நிலையை இந்தியப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தொலைத்துவிட்டன.
இதற்கு முடிவுதான் என்ன எனும் விவாதம் உயர்மட்ட அளவில் நடந்தது. அரசின் நிதிநிலை ஆதாரத்துடன் கல்லூரிகள் நடத்தி எல்லா மாணவர்களுக்கும் உயர் கல்வி வழங்கிட முடியாது என்பதால் தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உருவாவது அவசியம் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி நாடெங்கிலும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உருவாயின. ஆனால், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கில் நடக்கும் வியாபாரம்போல ஆகிவிட்டன. இது எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒன்று.
நம் நாட்டில் அரசுக் கல்லூரிகள், விடுதிகள் எல்லாமே அரசின் உதவித்தொகையுடன் நடந்து வந்தன. எனவே கட்டணங்கள் அதிகமாக இல்லை. இதனாலேயே அதில் பயிலும் மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கு கல்வியில் பெரிய அக்கறை உருவாகவில்லை.
தனியார் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி கல்வி கற்பதால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகிய எல்லோருமே மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். எல்லா தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் லாபநோக்கில் நடந்தாலும் மாணவர்கள் சேர்க்கைக்கு அவர்களுக்குள் கடும் போட்டிகள் உருவாகி மிகச் சிறந்த கல்லூரிகளுக்கு அதிகப் பணம் செலுத்தி மாணவர்கள் சேர்வது வரவேற்கத்தக்க ஓர் அம்சமே என்பது கல்வியாளர்களின் கருத்து. இதை அப்படியே நிரூபிப்பது அமெரிக்காவின் பல தனியார் பல்கலைக் கழகங்களே!
இதற்கு நம் மாநிலத்திலேயே ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி., எம்.எஸ். பட்டப்படிப்பில் சேர அகில இந்தியாவிலும் இருந்து மாணவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வருகிறார்கள். இதில் மிக அதிக அளவில் அமெரிக்காவில் இருந்தே டாலர் பணத்தைச் செலுத்தி இந்தக் கல்லூரியில் சேருகிறார்கள். அவர்களில் சில பெற்றோரிடம் பேசும்போது, ""இந்த மருத்துவக் கல்லூரியில் கல்வியின் தரம் நன்றாக இருப்பதால் எங்கள் குழந்தைகளை இங்கே சேர்க்கிறோம்'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள 3,500 பல்கலைக்கழகங்களில் பாதி தனியாருக்குச் சொந்தமானவையே. அரசின் பல்கலைக்கழகங்களைவிடவும் சிறந்த கல்வியை வழங்கும் எம்.ஐ.டி., பாஸ்டன் பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்களே! இதுபோன்ற தனியார் பல்கலைக்கழகங்களிலிருந்துதான் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து முன்னிலையில் வைத்துள்ளன. உயர் கல்வியில் பட்டப்படிப்பும் ஆராய்ச்சிகளும் கண்டிப்பாக இணைந்து செயல்படும் நிலை அங்கே உருவாகிவிட்டது. ஆராய்ச்சி அமைப்பு இல்லாத உயர் கல்வி நிலையங்களில் அதிக மாணவர்கள் சேர்வதில்லை. கல்லூரியின் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தங்கள் தகுதியைத் தொடர்ந்து நிரூபித்தால்தான் வேலையில் தொடர முடியும்.
அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய விஷயத்தை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடாத கல்லூரி ஆசிரியருக்கு சம்பள உயர்வு கிடையாது. நிறைய பல்கலைக்கழகங்களில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடாத ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.
இதுபோன்ற நடைமுறைகளை சீனா போன்ற நாடுகள் பின்பற்றி தங்கள் நாட்டிலும் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கலாசாரத்தை வளர்த்துள்ளன.
சமீபத்தில் "இந்தியா கேட்ஸ்' எனப்படும் வியாபாரம் மற்றும் பணிகளில் பொது ஒப்பந்தம் ஒன்றில், பல நாடுகளுடன் சேர்ந்து கல்வியில் வெளிநாட்டின் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கல்வி நிலையங்களைத் தொடங்கலாம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெளிநாட்டின் தனியார் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கல்லூரிகளைத் தொடங்கலாம். இதைப் பலர் வரவேற்றுள்ளனர்.
தரமான கல்வியை இவர்கள் வழங்கும் வகையில் இந்தத் தனியார் கல்வி நிலையங்களை அரசு கண்காணிக்க வேண்டும். தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்காமல், திறமையான கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை உள்ளடக்கி தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது முதல் அவற்றைக் கண்காணிக்கும் வேலையையும் செய்ய வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகிய பின்னரும் கல்வியின் தரம் உயரவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள் ஒன்பது. தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 473. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 18 கல்லூரிகளையும் சேர்த்தால் மொத்தம் 491.
இதில் 2010-11-ம் ஆண்டில் படித்த மாணவர்கள் 1,62,231 பேர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 16 சதவிகிதம் மாணவர்கள்தான் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். என்ஜினீயர்களாகப் பட்டம் பெற்று வேலையில் சேரும் பலருக்குச் சரியான வேலைத்திறன் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முக்கிய காரணம், நிறைய சுயநிதிக் கல்லூரிகளில் சரியான ஆசிரியர்கள் கிடையாது. பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டம் பெற்ற ஒருவர் உடனே அதுபோன்ற கல்லூரியில் ரூ.5,000 சம்பளத்தில் விரிவுரையாளராக சேர்த்துக் கொள்ளப்படுகிறார். எனவே இந்தியாவில் லாப நோக்கில் நடைபெறும் சுயநிதிக் கல்லூரிகளைக் கண்காணித்து வழிநடத்திச் செல்லும் அமைப்பு உருவாக வேண்டும்.
÷சரியான நடவடிக்கைகள் மூலம் உயர் கல்வியின் தரம் உயர்ந்து, ஆராய்ச்சிகளும் பெருகி அதன் முழுப்பலனும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது இன்றைய காலகட்டத்தின் மிக அவசரமான அவசியம்!
நவீன உலகின் பொருளாதாரச் சூழ்நிலை கடந்த காலத்தைப் போல்தான் என நம்மில் பலர் நினைக்கிறோம். அதாவது, நிறைய தொழிற்சாலைகள் உருவாகி உற்பத்தி பெருகி ஏற்றுமதி அதிகரித்து அதனால் நாட்டின் பொருளாதாரம் வளரும் என்ற நம்பிக்கை.
இந்த வகையான பொருளாதார முன்னேற்றம் இக்காலத்தில் நடைமுறைக்கு சாத்தியமல்ல என்பதை ஐரோப்பாவின் பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றையச் சூழ்நிலையில் விஞ்ஞான முறையிலான புதிய கண்டுபிடிப்புகள், நிர்வாக நடைமுறைகளில் மாற்றங்கள் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. இவை உருவாக ஒரு நாட்டின் உயர் கல்வி நிலையங்களும், கல்லூரியின் ஆராய்ச்சித் துறைகளும் மிகவும் சிறப்புடன் செயல்பட வேண்டும்.
ஆசியாவில் நமது முன்னேற்றத்துடன் போட்டியிடும் நாடுகள் சீனா, சிங்கப்பூர், தைவான் மற்றும் தென் கொரியா எனலாம். நாம் உற்பத்தி செய்யும் ஒரு பொருளை மேலைநாடுகளில் விற்பனை செய்ய முயலும்போது அதே பொருளை நம்மைவிடக் குறைந்த விலைக்கு மற்றொரு நாடு அங்கே விற்க முயன்றால் அதுவே இருநாடுகளுக்கான பொருளாதாரப் போட்டியாகிறது.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் நாட்டின் பின்னணியில் அந்நாட்டின் உயர் கல்வி நிலையங்களும், ஆராய்ச்சித் துறைகளும் இருக்கும். அங்கு உருவாகும் படிப்பாளிகளும், விஞ்ஞானிகளும் புதிய கண்டுபிடிப்புகளையும், பொருள்களை உற்பத்தி செய்யும் புதிய நடைமுறைகளையும் உருவாக்குகிறார்கள்.
2008-ம் ஆண்டு "லண்டன் டைம்ஸ்' பத்திரிகை நடத்திய ஓர் ஆராய்ச்சியின்படி உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் சீனா, தென் கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா மூன்று பல்கலைக்கழகங்களும் தைவான், இந்தியா ஆகிய நாடுகளில் தலா ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெற்றன.
ஆக, நம்மைவிட அதிக அளவில் உயர் கல்வியில் முன்னேறிய மூன்று நாடுகள், நமக்குச் சரிசமமாக ஒரு மிகச் சிறிய நாடு எனும் பரிதாபமான நிலைமை.
21-ம் நூற்றாண்டில் உலகின் தலைசிறந்த உயர் கல்விக்கான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய நாடுகளில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடம் இந்தியாவுக்கே. இதுபோல் உலகின் மூன்றாவது இடத்தை நம் நாடு பிடித்ததற்கு நமது நாட்டின் ஆங்கிலக் கல்வி முறையும் மிக அதிக அளவில் கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்து பட்டம் பெறுவதும்தான் காரணமாயிருந்தது.
எனினும், நமது மக்கள்தொகையைக் கணக்கிலெடுத்தால், இந்தியாவின் இளைஞர்களில் 10 சதவிகிதமே உயர் கல்வியில் சேர்ந்து பட்டம் பெறுகிறார்கள். ஆனால், சீனாவில் 15 சதவிகிதத்தினரும் பல மேலைநாடுகளில் 60 சதவிகித இளைஞர்களும் உயர் கல்வி பயில்கிறார்கள். உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஒருபுறம், அவற்றின் தரம் மற்றொருபுறம் என்ற உண்மையை நமது அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்பது விஷயம் தெரிந்தவர்களின் அறிவுரை.
நமது கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சரியான நிதி வசதி இல்லாமலும் நிறைய உள்பூசல்களுடன் சரியாக நிர்வகிக்கப்படாத நிலைமையிலும் இயங்குகின்றன என்பது ஒரு கசப்பான உண்மை. சரியான நிதி வசதியின்மையால் கல்லூரியின் நூல் நிலையங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், வகுப்பறைகள்வரை தரமில்லாமல் உள்ளன. நிறைய ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன; தாற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து நமது கல்லூரிகள் இயங்குகின்றன.
பல்கலைக் கழகத் துணைவேந்தர்களின் நியமனம் அரசியல் அடிப்படையில் நடக்கின்றது. மாணவர்கள் மத்தியில் ராகிங் தொடங்கி அடிதடி சண்டைகள் வரை போகிறது; ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் ஆரம்பிப்பதால் கல்வி கற்கும் சூழ்நிலையை இந்தியப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தொலைத்துவிட்டன.
இதற்கு முடிவுதான் என்ன எனும் விவாதம் உயர்மட்ட அளவில் நடந்தது. அரசின் நிதிநிலை ஆதாரத்துடன் கல்லூரிகள் நடத்தி எல்லா மாணவர்களுக்கும் உயர் கல்வி வழங்கிட முடியாது என்பதால் தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் உருவாவது அவசியம் என முடிவெடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி நாடெங்கிலும் பல தனியார் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் உருவாயின. ஆனால், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் லாபநோக்கில் நடக்கும் வியாபாரம்போல ஆகிவிட்டன. இது எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒன்று.
நம் நாட்டில் அரசுக் கல்லூரிகள், விடுதிகள் எல்லாமே அரசின் உதவித்தொகையுடன் நடந்து வந்தன. எனவே கட்டணங்கள் அதிகமாக இல்லை. இதனாலேயே அதில் பயிலும் மாணவர்கள், பெற்றோர் ஆகியோருக்கு கல்வியில் பெரிய அக்கறை உருவாகவில்லை.
தனியார் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் செலுத்தி கல்வி கற்பதால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகிய எல்லோருமே மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். எல்லா தனியார் உயர் கல்வி நிறுவனங்களும் லாபநோக்கில் நடந்தாலும் மாணவர்கள் சேர்க்கைக்கு அவர்களுக்குள் கடும் போட்டிகள் உருவாகி மிகச் சிறந்த கல்லூரிகளுக்கு அதிகப் பணம் செலுத்தி மாணவர்கள் சேர்வது வரவேற்கத்தக்க ஓர் அம்சமே என்பது கல்வியாளர்களின் கருத்து. இதை அப்படியே நிரூபிப்பது அமெரிக்காவின் பல தனியார் பல்கலைக் கழகங்களே!
இதற்கு நம் மாநிலத்திலேயே ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி., எம்.எஸ். பட்டப்படிப்பில் சேர அகில இந்தியாவிலும் இருந்து மாணவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வருகிறார்கள். இதில் மிக அதிக அளவில் அமெரிக்காவில் இருந்தே டாலர் பணத்தைச் செலுத்தி இந்தக் கல்லூரியில் சேருகிறார்கள். அவர்களில் சில பெற்றோரிடம் பேசும்போது, ""இந்த மருத்துவக் கல்லூரியில் கல்வியின் தரம் நன்றாக இருப்பதால் எங்கள் குழந்தைகளை இங்கே சேர்க்கிறோம்'' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள 3,500 பல்கலைக்கழகங்களில் பாதி தனியாருக்குச் சொந்தமானவையே. அரசின் பல்கலைக்கழகங்களைவிடவும் சிறந்த கல்வியை வழங்கும் எம்.ஐ.டி., பாஸ்டன் பல்கலைக்கழகங்கள் தனியார் பல்கலைக்கழகங்களே! இதுபோன்ற தனியார் பல்கலைக்கழகங்களிலிருந்துதான் நிறைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து முன்னிலையில் வைத்துள்ளன. உயர் கல்வியில் பட்டப்படிப்பும் ஆராய்ச்சிகளும் கண்டிப்பாக இணைந்து செயல்படும் நிலை அங்கே உருவாகிவிட்டது. ஆராய்ச்சி அமைப்பு இல்லாத உயர் கல்வி நிலையங்களில் அதிக மாணவர்கள் சேர்வதில்லை. கல்லூரியின் விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு தங்கள் தகுதியைத் தொடர்ந்து நிரூபித்தால்தான் வேலையில் தொடர முடியும்.
அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு புதிய விஷயத்தை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடாத கல்லூரி ஆசிரியருக்கு சம்பள உயர்வு கிடையாது. நிறைய பல்கலைக்கழகங்களில், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடாத ஆசிரியர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.
இதுபோன்ற நடைமுறைகளை சீனா போன்ற நாடுகள் பின்பற்றி தங்கள் நாட்டிலும் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கலாசாரத்தை வளர்த்துள்ளன.
சமீபத்தில் "இந்தியா கேட்ஸ்' எனப்படும் வியாபாரம் மற்றும் பணிகளில் பொது ஒப்பந்தம் ஒன்றில், பல நாடுகளுடன் சேர்ந்து கல்வியில் வெளிநாட்டின் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கல்வி நிலையங்களைத் தொடங்கலாம் என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெளிநாட்டின் தனியார் பல்கலைக்கழகங்கள் நம் நாட்டில் கல்லூரிகளைத் தொடங்கலாம். இதைப் பலர் வரவேற்றுள்ளனர்.
தரமான கல்வியை இவர்கள் வழங்கும் வகையில் இந்தத் தனியார் கல்வி நிலையங்களை அரசு கண்காணிக்க வேண்டும். தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்காமல், திறமையான கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகிகளை உள்ளடக்கி தனியார் கல்வி நிலையங்களுக்கு அனுமதி வழங்குவது முதல் அவற்றைக் கண்காணிக்கும் வேலையையும் செய்ய வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகிய பின்னரும் கல்வியின் தரம் உயரவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள் ஒன்பது. தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 473. அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 18 கல்லூரிகளையும் சேர்த்தால் மொத்தம் 491.
இதில் 2010-11-ம் ஆண்டில் படித்த மாணவர்கள் 1,62,231 பேர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 16 சதவிகிதம் மாணவர்கள்தான் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். என்ஜினீயர்களாகப் பட்டம் பெற்று வேலையில் சேரும் பலருக்குச் சரியான வேலைத்திறன் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முக்கிய காரணம், நிறைய சுயநிதிக் கல்லூரிகளில் சரியான ஆசிரியர்கள் கிடையாது. பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டம் பெற்ற ஒருவர் உடனே அதுபோன்ற கல்லூரியில் ரூ.5,000 சம்பளத்தில் விரிவுரையாளராக சேர்த்துக் கொள்ளப்படுகிறார். எனவே இந்தியாவில் லாப நோக்கில் நடைபெறும் சுயநிதிக் கல்லூரிகளைக் கண்காணித்து வழிநடத்திச் செல்லும் அமைப்பு உருவாக வேண்டும்.
÷சரியான நடவடிக்கைகள் மூலம் உயர் கல்வியின் தரம் உயர்ந்து, ஆராய்ச்சிகளும் பெருகி அதன் முழுப்பலனும் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பது இன்றைய காலகட்டத்தின் மிக அவசரமான அவசியம்!
No comments:
Post a Comment