சென்னை:
தமிழகத்தின் பல இடங்களில் பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குள் துவங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: பள்ளிப் படிப்பை நிறைவுசெய்யும் கிராமப்புற மாணவர்கள், வெளியூர் சென்று உயர்கல்வி(கல்லூரிப் படிப்பு) கற்பதில் பலவித சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்களில் பலர் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையை மாற்றும் வண்ணம், இந்த அரசு பொறியியல், மருத்துவம், கலை-அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் துவக்கி வருகிறது.
கடந்த 2011-12 கல்வியாண்டில், மொத்தம் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை-அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டன. தேனி மாவட்டம் போடியில், ஒரு அரசு பொறியியல் கல்லூரி துவங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சட்டசபையில் ஜெ., இது தொடர்பான அறிவிப்பில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 20 கல்லூரிகள நடப்பு கல்வியாண்டில் திறக்கப்படவிருக்கிறது
அரசு பொறியியல் கல்லூரிகள்:
1. தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சி
2.தஞ்சை வட்டம் செங்கிப்பட்டி
1.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்
2.புதுகை மாவட்டம் கந்தர்வக்கோட்டை
3. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம்
4.ஈரோடு மாவட்டம் பெருந்துறை
5.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
6.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை
7.அரியலூர்
ஆண்-பெண் இருபாலரும் படிக்கக்கூடிய, பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரிகள்
1. கன்னியாகுமரி
2.திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர்
3.சேலம் மாவட்டம் எடப்பாடி
4.பரமக்குடி,
5.நெல்லை மாவட்டம் கடையநல்லூர்
6. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி
7.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
8.மதுரை மாவட்டம் திருமங்கலம்
9.சென்னை அருகே
அரக்கோணம்
10.சென்னை அருகே திருவொற்றியூர்
11. நாகப்பட்டிணம்
இத்தகவலை, இச்சபையில் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
No comments:
Post a Comment