TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, March 25, 2012

அடுத்த 5 ஆண்டுகளில் 2,341 பள்ளிகளில் கணினிவழிக் கல்வி: முதல்வர்

சென்னை, மார்ச் 25: அடுத்த 5 ஆண்டுகளில் 2,341 பள்ளிகளில் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதுதொடர்பாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டு காலத்தில் 1,880 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 461 உயர்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வியை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்தத் திட்டத்துக்காக முதல் தவணையாக ரூ.31 கோடியே 21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அறிவுசார் பள்ளிகள்: 
நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர் மாவட்டம் வீரசோழனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் முதற்கட்டமாக ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் "அறிவுசார் பள்ளிகள்' நிறுவ முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதற்காக முதற்கட்டமாக, ரூ.26 லட்சம் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் திருச்செந்துறை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, எட்டரை, இனாம்குளத்தூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் அறிவுசார் பள்ளிகள் தொடங்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால், நிலையிறக்கம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடம், தலைமையாசிரியர் பணியிடமாக நிலை உயர்த்தப்படுகிறது.


புதிய பணியிடங்கள்: நடுநிலைப் பள்ளிகளிலிருந்து உயர் நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 544 பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பராமரிக்க 544 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், அலுவலகப் பணிக்காக 344 இளநிலை உதவியாளர் பணியிடங்களும் ஏற்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் ஸ்கூலில் கூடுதலாக என்ன வசதிகள்?
சாதாரணப் பள்ளிகளில் உள்ள கரும்பலகைகளுக்குப் பதிலாக ஸமார்ட் பள்ளிகளில் (அறிவுசார் பள்ளிகள்) ஸ்மார்ட் போர்டுகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஸ்மார்ட் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட உள்ள கூடுதல் வசதிகள் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது:இந்தப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் உதவியுடன் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுத்தரப்படும். வகுப்பறைகளில் சாதாரண கரும்பலகைக்குப் பதிலாக "ஸ்மார்ட் போர்டு' நிறுவப்படும்.இந்த ஸ்மார்ட் போர்டு கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும். அதன்மூலம் கம்ப்யூட்டர் திரையை போர்டில் பார்க்கலாம்.கல்வி தொடர்பான தகவல்கள், அனிமேஷன்கள், படங்கள் ஆகியவற்றை இன்டர்நெட் மூலமாக மாணவர்களுக்கு தெளிவாக விளக்கலாம். உயிரியல் பாடத்தில் நுரையீரல் செயல்பாடு குறித்து விளக்க வேண்டும் என்றால், வெறுமனே படத்தை மட்டும் வரையாமல், அது எவ்வாறு செயல்படும் என்பதை அனிமேஷன் மூலம் விளக்கலாம்.அதன்மூலம், மாணவர்கள் மிகச் சிறந்த முறையில் கல்வி கற்க முடியும். அதேநேரத்தில், வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த ஸ்மார்ட் போர்டை பாடங்களை எழுதுவதற்கும் பயன்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Friday, March 23, 2012

53 புதிய மாணவர் விடுதிகள்

மிழகத்தில் புதிதாக 53 மாணவர் விடுதிகளைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக ஆயிரத்து 254 நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளின் பயனாக இப்போது ஆதிதிராவிட மாணவர்கள் அதிகளவில் கல்வி கற்க முன்வருகின்றனர். இடைநிற்றல் மிகவும் குறைந்துள்ளதால் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாக புதிய விடுதிகள் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஆதிதிராவிட மாணவர்களுக்காக 21 பள்ளி விடுதிகள், 4 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 25 விடுதிகள் புதிதாக தொடங்கப்படும். இதில் ஒரு விடுதிக்கு 50 மாணவர்கள் வீதம் ஆயிரத்து 250 பேர் சேர்க்கப்படுவர். விடுதிகளை பராமரிக்க ஒரு விடுதிக்கு பட்டதாரி காப்பாளர் அல்லது காப்பாளினியும், சமையலர் மற்றும் காவலர் என மொத்தம் மூன்று பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். அதன்படி 25 விடுதிகளுக்கு 75 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். புதிதாக தொடங்கப்படவுள்ள 25 விடுதிகளுக்காக அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.2.93 கோடியும், தொடரா செலவினமாக ரூ.39.71 லட்சம் என மொத்தம் ரூ.3.32 கோடி செலவாகும். பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர்: இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இன மாணவர்களுக்காக 15 விடுதிகளும், மாணவியர்களுக்காக 10 விடுதிகள் என மொத்தம் 25 கல்லூரி விடுதிகளும், இஸ்லாமிய சிறுபான்மையின பள்ளி மாணவர்களுக்காக 3 விடுதிகள் என மொத்தம் 28 விடுதிகள் தொடங்கப்படும். இந்த விடுதிகளை பராமரிக்க 112 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இதனால் அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.1.43 கோடியும், தொடரா செலவினமாக ரூ.58.51 லட்சம் என மொத்தம் ரூ.2.1 கோடி செலவாகும் என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Government revises General Provident Fund (GPF) interest rates…


முப்பருவ தேர்வு முறை - பள்ளி நாட்கள் பிரிப்பு

அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன், கல்லூரிகளில் செமஸ்டர் முறை போல், பள்ளிகளில் முப்பருவ தேர்வு முறையை செயல்படுத்த உத்தரவிட்டது. இது, வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.

ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, முப்பருவமுறை குறித்து, சென்னையில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு பாடத்திற்கு, மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பர்.

பள்ளி நாட்கள், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • ஜூன் 1 முதல் அக்டோபர் 1 வரை- முதல் பருவம்; மொத்த வேலை நாள்- 81.
  • அக்., 3 முதல் டிச., 31 வரை- இரண்டாம் பருவம்; வேலை நாள்- 56.
  • ஜன., 1 முதல் ஏப்., 26 வரை- மூன்றாம் பருவம்; வேலை நாள்- 73.
ஒவ்வொரு பருவம் முடிவிலும், தேர்வு நடக்கும்.
 
நன்றி:
 
 
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: 
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 7500 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக 60 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவார்கள். 

Wednesday, March 21, 2012

TET இரண்டாம் தாளுக்கான பாடத்திட்டம்






குழந்தைகள் மேம்பாடு & கற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண்




மொழித்தாள்-1-(தமிழ்-கட்டாயம்) 30 மதிப்பெண்




மொழித்தாள் - 2-(ஆங்கிலம்-கட்டாயம்) 30 மதிப்பெண்




கணிதம் மற்றும் அறிவியல்
(கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்



சமூகவியல் -(சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது.





TNTET  PAPER-2  MODEL QUESTION PAPER
T E T-PAPER-1  SYLLABUS




குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண்




மொழித்தாள் -1(கற்பிக்கும் மொழி-தமிழ்) 30 மதிப்பெண்





மொழித்தாள் -2(விருப்ப மொழி-ஆங்கிலம்) 30 மதிப்பெண்




கணிதம் 30மதிப்பெண்




சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண்








TNTET PAPER 1 MODEL QUESTION PAPER

Sunday, March 18, 2012

தாழ்த்தப்பட்டோர் வாழ்க்கை மேம்பட ரூ.1,084 கோடி ஒதுக்கீடு

23 Jan) விழுப்புரம், 


ஜன.22: தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ரூ.1,084 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ÷
தமிழக ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க மாநில மாநாடு விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 


மாநாட்டில் அம்பேத்கர், சங்க நிறுவனர் கே.எஸ்.அந்தோணிசாமி ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்து, அந்தோணிசாமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை சங்கத்தின் சார்பில் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். 


÷ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களையும் கெüரவித்தார். பின்னர் இத்துறை சார்பில் வெளியிடப்பட்ட 40 ஆண்டு கால அரசாணைகளின் தொகுப்புப் புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் பேசியது: 


÷இந்த சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்துறைக்கு ரூ.1,084 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 34 அரசாணைகள் மூலம் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ÷6.38 லட்சம் மாணவர்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்ள ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக அவர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்க ஆணையிட்டுள்ளார். ÷வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் மாணவர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட இந்த ஆண்டு 50 விடுதிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளார். நலப்பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார் என்றார். 


÷மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் கோ.பாக்கியராஜ் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலர் பி.சிவக்குமார், மகளிரணி செயலர் ஆர்.காந்திமதி, துணைப் பொதுச்செயலர் ஆர்.திருக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ÷பொதுச்செயலர் சி.ஜெயக்குமார் வரவேற்றார், பொருளாளர் வெ.பாலையன் அறிக்கை வாசித்தார். சங்க ஆலோசகர் வி.அண்ணாமலை கோரிக்கைகளை முன்மொழிந்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். ÷மாவட்டச் செயலர் எஸ்.சக்திவேல் நன்றி கூறினார். ÷முன்னதாக பேரணியை மாவட்டத் தலைவர் எல்.கோவிந்தராஜுலு தலைமையில் மக்களவை உறுப்பினர் எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார். மாநில ஆலோசகர் எம்.ராஜு சங்கக் கொடியேற்றினார். 


÷கருத்தரங்கம்: கருத்தரங்கிற்கு ஒருங்கிணைப்பாளர் காஞ்சி க.மனோகரன் தலைமை தாங்கினார், கொள்கைபரப்புச் செயலர் வி.கலையரசன், தலைமை நிலையச் செயலர் என்.மதிஒளி, மகளிரணி துணைச் செயலர் கே.இந்திராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொதுச்செயலர் எம்.அற்புதநாதன் வரவேற்றார். ÷கருத்தரங்கில் பல்வேறு சங்க நிர்வாகிகள் டி.சுப்பிரமணியம், என்.மகாராஜன், எஸ்.பாலசுந்தரம், சிவ.முருகேசன், வே.மணிவாசகன், தெ.வே.சஞ்சீவிராயன், சி.சேகர் ஆகியோர் பேசினர்.

முதலிடம் பிடித்த ஆதிதிராவிட மாணவியருக்கு பரிசளிப்பு விழா



பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011,22:11 IST
திருவள்ளூர் : மாவட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவியருக்கும், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும், பாராட்டு விழா திருவள்ளூரில் நடந்தது. தமிழக ஆதிதிராவிடர் - ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கத்தின் சார்பில் நடந்த இவ்விழாவுக்கு, மாவட்டத் தலைவர் பி.கிருபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.கிருபாகரன் வரவேற்றார். ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் படித்து, பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பிடித்த ஆனந்தி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவி அனிதா ஆகியோருக்கு, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ரமணா, பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, 14 ஆசிரியர்களுக்கும் கேடயம், கைக்கடிகாரம் வழங்கி அவர் பாராட்டினார். இவ்விழாவில் எம்.எல்.ஏ., மணிமாறன், மாநில நிர்வாகிகள் பாக்யராஜ், ஜெயக்குமார், பாலையா, ஒருங்கிணைப்பாளர் மனோகரன், மாவட்டப் பொருளாளர் தாமோதரன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.


எஸ்எம்எஸ் பிரச்னை முதல்வருக்கு கோரிக்கை


விருத்தாசலம், செப். 9&
தமிழக ஆதிதிராவிடர், ஆதிவாசிகள் நலத்துறை, ஆசிரியர் காப்பாளர் சங்க மாநில தலைவர் பாக்கியராஜ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான எஸ்எம்எஸ் அனுப்பு முறை சாத்தியமில்லாதது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத நடைமுறையை கடலூர் மாவட்ட கலெக்டர் நடைமுறைப்படுத்தி உள்ளது ஏற்கத்தக்கதல்ல. இம்முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. எனவே, பள்ளி கல்வி நிர்வாகத்தினை நிர்வாகிக்கும் அலுவலர்களின் துணை கொண்டு சிறப்பாக, முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாக்கும் எஸ்எம்எஸ் முறையை நீக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா


First Published : 17 Jul 2011 08:38:47 AM IST



திருவள்ளூர், ஜூலை 16: தமிழக ஆதிதிராவிடர் - ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் -காப்பாளர் சங்கம் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை திருவள்ளூரில் நடைபெற்றது.
 மாவட்ட தலைவர் பி. கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாநில துணைத் தலைவர் திருப்பதி, செயற்குழு உறுப்பினர் தாமஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் டி. கிருபாகரன் வரவேற்றார்.
 நிகழ்ச்சியில் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. மணிமாறன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பி.வி. ரமணா பங்கேற்று ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் உழைப்பு மற்றும் சாதனைகள் குறித்து பாராட்டி பேசினார்.
 தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் சம்பத், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் நிர்மலா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைத்திட கோரிக்கை

விழுப்புரம்:


தமிழக ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை மாவட்டத் தலைவர் கோவிந்தராஜூலு துவக்கி வைத்தார். மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சிவக்குமார், காந்திமதி, திருக்குமரன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். பொருளாளர் பாலையன் அறிக்கை வாசித்தார். சங்க ஆலோசகர் அண்ணாமலை கோரிக்கையை முன்மொழிந்து பேசினார். கல்வி அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளை ஒருங்கிணைத்து தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

தகுந்த மதிப்பெண்கள் போடுவது எப்படி?


ஜனவரி, பிப்ரவரி பிறந்துவிட்டால் போதும். பிளஸ் டூ பயிலும் மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? சுலபமாய் மதிப்பெண்கள் பெற நூறு டிப்ஸ், மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என்று ஊடகங்கள் விதவிதமாய் செய்திளை வெளியிடுகின்றன. பல்வேறு கல்வியாளர்களின் பேட்டிகள், உளவியல் நிபுணர்களின் பரிந்துரைகள்... மாணவர்கள் திக்கு முக்காடித்தான் போகிறார்கள். நல்லது.

 இவற்றின் நீட்சியாக விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின் பணி குறித்தும், விடைத்தாள் திருத்தும் மையங்களின் வசதிகள் குறைத்தும் பேச வேண்டிய அவசியம் உள்ளது.
 மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் பிளஸ் டூ தேர்வுகள் இறுதி வாரத்தில் முடிவடைகின்றன. இந்த விடைத்தாள்களுக்கு டம்மி எண்கள் கொடுக்கப்பட்டு வெவ்வேறு மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட எல்லா மாவட்ட தலைநகரிலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உள்ளன.
 மாவட்டத் தலைநகரில் எல்லா அடிப்படை வசதிகளும் அமைந்த பள்ளியை விடைத்தாள் திருத்தும் மையமாக அரசு தேர்வு செய்ய வேண்டும். இது மிக மிக முக்கியமானது.
 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும். நல்ல காற்றோட்டமான வசதி கொண்ட வகுப்பறைகள் இருக்க வேண்டும். பேப்பர் திருத்தும் காலம் சரியான கோடை காலம் என்பதால் மின் விசிறி பொருத்தப்பட்ட அறைகளாக இருக்க வேண்டும். தடையற்ற மின்சாரம் இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். (தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்பு, ஏப்ரல் இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்).
 ஆசிரியர்கள் அமர்வதற்குச் சரியான இருக்கைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் வகுப்பறை போதாமல், வேதியியல் ஆய்வுக்கூடங்களில் அமர்ந்து விடைத்தாள் திருத்திய அனுபவங்கள் ஆசிரியர்களுக்கு உண்டு.
 மின் விசிறி இல்லாமல், உஸ்... உஸ்... என்று பேப்பரால் விசிறிக் கொண்டு தூண்களில் சாய்ந்தபடி பேப்பர் திருத்தும் வயதான ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது.
 ஆசிரியர்களுக்கு நல்ல குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது பாட்டிலில் தண்ணீர் கொண்டு வரும் சூழலே நீடிக்கிறது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சிவப்பு பால் பேனாக்களை அரசே வழங்கலாம். இதுநாள்வரை ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவிலேயே வாங்கி வருகிறார்கள்.
 ஒவ்வொரு நாளும் காலை 12 விடைத்தாள்களும், மாலை 12 விடைத்தாள்களும் ஒவ்வோர் ஆசிரியருக்கும் வழங்கப்படுகிறது. நிதானமாய் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குறைந்த எண்ணிக்கை.
 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அந்தந்தப் பள்ளியிலேயே இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, அவர்கள் குளிப்பதற்கும், கழிப்பறை செல்வதற்கும் அடிப்படை வசதிகளை பள்ளிகள் செய்து தர வேண்டும்.
 பராமரிப்பில்லாத கழிப்பறைகள், குளியலறைகள் இருக்கும்பட்சத்தில் பெண் ஆசிரியர்களோ, ஆண் ஆசிரியர்களோ தங்குவதற்குப் பயந்து, தினமும் தங்களது ஊர் சென்று திரும்புவார்கள். இரவு 7 மணிக்கு தங்களது ஊர் பேருந்தைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விடைத்தாள்களைத் திருத்துவார்கள்.
 "அவனுக்கு நேரம் சரியில்லை' என்பார்களே... அது இதுதான்' இந்த நேரத்தில் ஆசிரியரின் கையில் எவன் பேப்பர் கிடைக்கிறதோ... அவனுக்கு "நேரம் சரியில்லை'தான். அந்தி சாயும் வேளையில், கண்ணாடி போட்டபடி அவசர அவசரமாய்த் திருத்த முற்படும்போது, தவறு ஏற்பட வாய்ப்பு அதிகம்!
 ஆசிரியர்கள் மனநிலை சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்திலேயே தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வீட்டுக்குச் சென்றால் மனைவி, குழந்தைகளுடன் ஏதேனும் சண்டை சச்சரவு ஏற்படும் சூழலில், அதன் வெளிப்பாடு விடைத்தாளில் பிரதிபலித்துவிடக் கூடாது என்பதுகூட பிரதான காரணங்களில் ஒன்று.
 ஆசிரியர்கள் இதை உணர வேண்டிய அதே நேரத்தில், பள்ளி நிர்வாகங்களும் இந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வைக்க வேண்டும்.
 விடைத்தாள் திருத்தும் மையம், பேருந்து வசதி அடிக்கடி கொண்டதாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடமாக அமைய வேண்டும்.
 திருத்தும் ஒவ்வோர் ஆசிரியரும், திருத்தும் வேளையில் தமது குழந்தைகளை நினைத்தபடி திருத்தினால் கவனம் சிதறாது. நிச்சயமாக மாணவச் செல்வங்கள் யாவருமே அவர்களது குழந்தைகள்தானே?
 இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அழைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் பிளஸ் டூ ஆசிரியர்களில் 75 சதவிகிதம் பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
 பேப்பர் திருத்தும் பணியில் ஈடுபடாமலேயே பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர்களும் உள்ளனர். "மேலிட' செல்வாக்கு காரணமாக, அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடாமல் தப்பித்து விடுகின்றனர். இதில் பாதிக்கப்படுவது இவர்களிடம் பயிலும் மாணவர்கள்தாம்.
 ஒரு வினாவுக்கு எப்படி விடை எழுத வேண்டும்? அதற்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்படுகிறது என்பதை விடைத்தாள் திருத்தி அனுபவப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே தமது மாணவர்களுக்கு விளக்க முடியும்.
 ஒப்பீட்டளவில் பார்த்தால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் திருப்திகரமானது என்றே கூற வேண்டும். எனவே, ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியும் ஆசிரியப் பணியின் ஒரு பகுதியே என்பதை உணர வேண்டும்.
 போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட மாணவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. அரை மதிப்பெண்ணில் நல்ல பொறியியல் கல்லூரியை கோட்டை விடும் மாணவியும் உண்டு. எனவே, விடைத்தாளின் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மதிப்புமிக்கது.
 மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே ஆசிரிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள்கொண்ட பள்ளியைத் தேர்வு செய்து முறைப்படி அறிவிக்கலாம்.
 ஒவ்வோராண்டும் விடைத்தாள் திருத்தும் பணி என்பது நிரந்தரம் ஆனதால், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் விடைத்தாள் திருத்தும் மையம் என்ற கட்டடத்தை அரசே கட்டலாம். அதிலே அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர முடியும். ஏனைய நாள்களில், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் கூடங்களாகக்கூட அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
 மொத்தத்தில், விடைத்தாள் திருத்தம் மையங்கள், எல்லா அடிப்படை வசதிகளுடனும் இருந்தால் ஆசிரியர்கள் நல்ல மன நிலையில் பணி புரிய முடியும். நல்ல மனநிலையில் பணி புரிந்தால், மாணவர்களின் விடைத்தாள் நல்ல முறையில் திருத்தப்படும். அதைவிட வேறு "அதிர்ஷ்டம்' என்ன வேண்டும்? 

Friday, March 16, 2012

வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்வு

புது தில்லி, மார்ச் 16: 

மாதாந்திர சம்பளதாரர்கள் ஓரளவு பயனைடயும் வகையில் ஆண்டு வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.  மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2012-13-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இதன்படி ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை உள்ளவர்கள் இனி வருமான வரி செலுத்தத் தேவையில்லை. முன்னர் இது ரூ. 1.80 லட்சமாக இருந்தது.  அத்துடன் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 10 சதவீத வரி செலுத்த வேண்டும்.  ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான ஊதியம் பெறுவோர் 20 சதவீத வரி செலுத்த வேண்டும். ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஊதியம் பெறுவோர் 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்றார் முகர்ஜி.  பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரையான தொகைக்கு வரி கிடையாது. ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.  நேரடி வரி வரைவை (டிடிசி) அமல்படுத்தும் நோக்கில் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக முகர்ஜி தெரிவித்தார்.  ஆனால் நேரடி வரி வரைவை பரிசீலித்து வரும் நாடாளுமன்ற நிலைக்குழு வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால் அதை முகர்ஜி செயல்படுத்தவில்லை.  மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வசதியை 60 வயது முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்கள் பெறலாம். ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் ரூ. 5 லட்சம் வரையிலான தொகைக்கு 10 சதவீதமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் ரூ. 10 லட்சம் வரையிலான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையான தொகைக்கு 20 சதவீதமும், ரூ. 10 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும்.  நேரடி வரி வரைவு (டிடிசி) தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கைகள் ஆராயப்படுகின்றன. இதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.  இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ள வரி விதிப்பு முறைக்கு மாற்றாக அமையும்.  சேமிப்புகளின் மூலம் கிடைக்கும் தொகைக்கு வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் வரை தொகை பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் முகர்ஜி.

மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம். இனி ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.


மாத ஊதியத்திலிருந்து வருமான வரி பிடித்தம் செய்த பிறகு ஒவ்வொரு அரசு ஊழியரும் வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல் அவசியம். இனி ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்ட மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Sunday, March 11, 2012

கல்விச்சாலையா? சிறைச்சாலையா?

மனிதனை மனிதனாக மாற்றுவதும், மனிதனை மற்ற விலங்கிலிருந்து வேறுபடுத்துவதும் கல்வியாகும். அதுதான் பண்பாட்டையும், நல்ல பழக்கவழக்கங்களையும் வளர்க்கிறது. மனிதப் பண்பையும், மனித நேயத்தையும் வளர்த்தெடுக்கிறது. அதனால்தான் கல்வி மனித சமுதாயத்தின் தவிர்க்க முடியாத தேவையாகிறது.


 "ஓர் அரசாங்கத்தின் நோக்கமே மக்களுக்குக் கல்வியைப் பயிற்றுவிப்பதுதான்' என்று மாவீரன் நெப்போலியனும், "ஒரு தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பது வகுப்பறைகளே' என்று கல்வியாளர் கோத்தாரி கூறியதும் அதனால்தான். 
 இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசாங்கம் "குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009' கொண்டு வந்திருப்பதும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் இதற்கான பரிந்துரை கட்டாயமாக்கப்பட்டிருப்பதும் கல்வியின் இன்றியமையாமையை எடுத்துக் காட்டுகிறது. இதனால்தான் மத்திய, மாநில அரசுகள் இதன் உரிமைக்காகப் போராடுகின்றன; விட்டுக் கொடுக்க மறுக்கின்றன.


மனிதர்களுக்கு எண்ணும், எழுத்தும் இரண்டு கண்களாகின்றன என்றும், கல்லாதவர்களுக்கு இரண்டு கண்களும் புண்களாகின்றன என்றும் நீதி நூல்கள் கூறுகின்றன. இத்தனை காலமாக இல்லாத அளவுக்கு இப்போது கல்விக்காகப் பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். எல்லாம் சரி, இந்தக் கல்வி இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறது? அதன் இலக்கு திசைமாறிக் கொண்டிருப்பதாகத் தினமும் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 


 சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியை, அப்பள்ளியில் ஒன்பதாவது படிக்கும் மாணவனாலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. "மாதா பிதா குரு தெய்வம்' என்று படிக்கப்பட்ட ஒரு நாட்டில் இப்படியும் நடக்குமா? இந்தச் சின்ன வயதில் இப்படி ஒரு கொலைவெறி எங்கிருந்து வந்தது? 


 சென்னையில் கல்வியதிகாரி திட்டியதால் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் ஒருவர் "ஆசிட்' குடித்துள்ளார். இந்த நிகழ்வுக்குக் காரணமாகக் கருதப்பட்ட கல்வியதிகாரி மற்றும் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ..
  
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த பேராசிரியை ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 உயர் கல்வியாகிய மருத்துவக் கல்வி பயின்று வந்த ஒரு மாணவன் சக மாணவனையே துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த அந்தக் கோரக் கொடுமையை எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியுமா? 


கல்லூரிக்கு வரும் முதலாண்டு மாணவர்களைக் கேலியும், கிண்டலும் செய்யும் "ராகிங்' கொடுமையால் மனம் உடைந்து மாண்டவர்கள் எத்தனை பேர்? கல்விக்கூடத்தை விட்டே ஓடியவர்கள் எத்தனை பேர்? நடைபிணங்களாக மாறியவர்கள் எத்தனை பேர்? 


 பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரியாமல் பேருந்துகளில் ஏறிக் கொண்டு, சக பயணிகள் முகம் சுளிக்கும்படி கும்மாளம் அடிப்பதும், "பேருந்து தினம்' என்ற பெயரில் பேருந்து கூரையில் ஏறிக்கொண்டு கூத்தடிப்பதும் நமது கல்வி முறையைச் சந்தேகிக்க வைக்கிறது. 


 சில பள்ளிகளில் ஆசிரியர்களே சாதி வெறியோடு செயல்படுவதும், சில கல்லூரிகளில் மாணவர்கள் சாதி வெறியோடு செயல்படுவதும் கலவரங்களின்போது வெளிப்படுகிறது. 


மாணவர்கள் போதைப் பொருளுக்கும், பாலியல் வன்முறைக்கும் இலக்காகும் போக்கு தொடர்கிறது. 
சில மாணவர்கள் சமூக விரோதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கூலிப்படையாகச் செயல்படுவதும், செயல்படுத்துவதும் மன்னிக்க முடியாத குற்றம் என்று இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டாமா? 


மாணவர்களும், இளைஞர்களும் இந்தச் சமுதாயத்தின் அசைக்க முடியாத அங்கங்கள்; சமுதாய விருட்சத்தின் வேர்களாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் இருந்தாலும், மாணவர்களும், இளைஞர்களுமே அவற்றின் விழுதுகள்; வேர்கள் பழுதாகும்போது இந்த விழுதுகளே தாங்க வேண்டும். இந்த விழுதுகளே பழுதானால்...


தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சமூகவிரோதச் செயல்களிலும், தீவிரவாதச் செயல்களிலும் ஈடுபடுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்று உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். 


கடந்த நவம்பர் மாதம் சென்னை தாம்பரம் அருகே வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டதாக பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதை மெய்ப்பித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாதச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு அரசியல், சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளே காரணங்களாகும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் நுகர்வுக் கலாசாரத்தால் எதையும் உடனடியாகப் பெறத் துடிக்கும் மாணவர்கள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். சென்னை போன்ற பெரிய நகரங்களில் இது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இயக்கங்களிலும், திராவிடக் கட்சிகளிலும் சேருவதற்கு ஆர்வம் காட்டிய மாணவர்கள் இப்போது ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, திராவிட இயக்கங்கள் விட்டுச் சென்ற இடத்தைத் தடை செய்யப்பட்ட இயக்கங்களும், தீவிரவாத இயக்கங்களும் அடைவதற்கு முயல்வதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். இவ்வாறு மாணவர்கள் சீரழிந்து போவதற்கு இந்தச் சமுதாயச் சீரழிவையே காரணமாகக் கூற வேண்டும். எப்படியாவது பணம் பண்ண வேண்டும் என்று சுயநலத்தோடு அலைகிற சமுதாயம் இளைய தலைமுறைக்கு எதைக் கற்றுக் கொடுக்கும்? ஊழலும், லஞ்சமுமே ஒரு நாட்டின் உற்பத்திப் பொருளாக மாறிவிட்டபோது ஒழுக்கமும், உண்மையும் ஓடி ஒளியாமல் என்ன செய்யும்? 


 அறங்களிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட கல்வி என்பது இப்போது கடைச்சரக்காகிவிட்டது. பணம் இருந்தால்தான் படிக்கவே முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. "படிப்பு' என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் என்றே பெற்றோரும், மற்றோரும் எண்ணுகின்றனர். இவர்கள் கற்பது ஒழுக்கமும், பண்பாடும், மனித நேயமும் வளர்வதற்கென்று யாராவது, எப்போதாவது நினைத்ததுண்டா? மனிதன் பிறந்த நிலையிலேயே விட்டுவிடப்பட்டால் அவன் மனிதனாக இருக்க மாட்டான். அவன் வாழும் சூழ்நிலை அவனது இயற்கைத் தன்மையைச் சூறையாடி விடும்; பல பேர் நடந்து செல்லக்கூடிய பாதையில் செடியை வளரவிட்டால் அது அழிந்து போகும். கல்வியற்ற 
மனிதனும் அழிபட்டுத்தான் போவான். 


செடி நன்றாக வளர வேண்டுமானால் மண்ணைக் கிளறி, காலாகாலத்தில் நீர் பாய்ச்சி, எருவிட்டு, புழு பூச்சி முதலியன அணுகாதபடி காப்பாற்றப்பட வேண்டும். அதுபோலவே மனிதன் பண்பாடு பெற வேண்டுமானால் அவனுக்குக் கல்வி மிகவும் அவசியமானது. இவ்வாறு கல்வியைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட ரூசோ கூறினார்.


மக்களுக்குக் கல்வியின் தேவை புரிகிறது. ஆனால், கல்வி முறைதான் புரியவில்லை. உலகம் முழுவதும் உண்மையான கல்வியைத் தேடி மனிதகுலம் அலைகிறது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் இந்தத் தவிப்பு இருமடங்காகிறது. சமத்துவத்தையும், சமதருமத்தையும் நோக்கி இந்தக் கல்விமுறை ஏழை, எளிய மக்களை அழைத்துப் போகவில்லை. மாறாக, பெரும்பான்மையான மக்களிடமிருந்து அன்னியப்பட்டுப் போனது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்றும், "பள்ளிக் கணக்கு புள்ளிக்கு ஆகாது' என்றும் இந்தக் கல்விமுறையைக் கேலி செய்யும் நாட்டுப்புற மக்களின் பழமொழிகள் ஏராளம். இதைப் பற்றி நம் கல்வித்துறை கவலைப்பட்டதே இல்லை. கடந்த காலங்களில் அரசும், கல்வித்துறையும் நியமித்த கல்விக் குழுக்களின் அறிக்கையை முழுமையாகப் படித்ததுண்டா? நடைமுறைப்படுத்தியதுதான் உண்டா? தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பற்றியே கவலைப்படாத ஒரு புதிய சமுதாயத்தை இந்தக் கல்விமுறை வளர்த்து வருகிறது. "மாதா பிதா குரு தெய்வம்' என்பதெல்லாம் அவர்களுக்குப் புரியாது; நுகர்வுக் கலாசாரத்தில் அதற்கு எல்லாம் இடமில்லை. கண்ணையும், காதுகளையும் மூடிக் கொண்டு இசையை மட்டும் கேட்டு அனுபவிப்பார்கள். வேறு எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. பரந்த உள்ளமும், பண்பாடும் வளர்க்க வேண்டிய கல்விமுறை பணம் பண்ணும் தொழிலாகச் சுருங்கிவிட்டது. 


மனித மாண்புகளை வளர்ப்பதற்குப் பதிலாக, மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மனிதர்களை மாற்றிவிட்டது. எந்திரங்களுக்கு இதயம் ஏது? இதயம் இல்லாத மாணவர்களை உருவாக்குவதால் என்ன பயன்? அன்னையும், பிதாவுமான முன்னறி தெய்வங்களையே அநாதை விடுதிக்கு அனுப்புவதும், வணக்கத்துக்குரிய குருவையே கொலை செய்வதுமான மனித நேயமற்ற போக்கையே இந்தக் கல்விமுறை வளர்த்தெடுக்கிறது


"எங்கு எது நடந்தாலும் கண்டு கொள்ளாதே' என்பதுதான் இந்தக் கல்வி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடமாகும். இந்தப் பாடத்திட்டம்தான் இத்தனை காலமாக இங்கே நடத்தப்படுகிறது. 


 "கல்வியின் நோக்கம், கற்கும் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவும், மனவலிமை மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்' என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்


. நமது கல்விக்கூடங்களில் இதற்கு இடம் இருக்கிறதா? மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குத் தேவையான கலை, கைத்தொழில், விளையாட்டு, நீதிபோதனை முதலிய வகுப்புகள் முடக்கப்பட்டு, அங்கும் மனப்பாடப் படிப்பு மட்டுமே நடத்தப்படுகிறது. பல பள்ளிகளில் நூலகம் என்பதே இல்லை. இருந்தாலும் அவை செயல்படுவதே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல ஆசிரியர்களின் தேவை இன்னும் தொடர்கிறது


 கிரேக்க மாவீரன் அலெக்சாண்டரின் வெற்றிகளுக்கு அவனது ஆசிரியர் அரிஸ்டாடில் பின்னணியில் இருந்தார் என்று வரலாறு கூறுகிறது. ""நான் வாழ்வதற்காக என் தந்தைக்குக் கடமைப்பட்டுள்ளேன்; நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்'' என்று அலெக்சாண்டர் கூறியுள்ளார். ஆனால், இங்கே நல்ல ஆசிரியர்களுக்கு ஒரு மாணவன் தரும் பரிசு மரணம்தானா


 கல்விச்சாலை பெருகினால் சிறைச்சாலைகள் குறையும்; குறைய வேண்டும் என்பதுதான் நியதி; இங்கே கல்விச்சாலைகளும் பெருகுகின்றன; சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்தச் சமுதாயத்தின் சீர்கேடுகளுக்குத் தீர்வு காண வேண்டாமா?....
  
நன்றி : தினமணி 12.03.2012

Friday, March 9, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு Prospectus

ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு advertisement


ஆசிரியர் தகுதித் தேர்வு: பி.லிட். படித்தவர்கள் எந்தத் தாளை எழுதலாம்? தேர்வு வாரியம் விளக்கம்

சென்னை, மார்ச் 9: ஆசிரியர் தகுதித் தேர்வில் பி.லிட். தமிழ்ப் பட்டதாரிகள் எந்தத் தாளை எழுதுவது என்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
 ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை முதல் தாளும், பிற்பகல் இரண்டாம் தாளும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் முதல் தாள் தேர்வையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புபவர்கள் இரண்டாம் தாள் தேர்வையும் எழுதலாம்.
 பி.லிட். மற்றும் பி.எட். படித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 பி.லிட். படிப்போடு டிப்ளமோ படித்தவர்கள், புலவர் பயிற்சி முடித்தவர்கள் எந்தத் தாளை எழுத வேண்டும் என்பது தொடர்பாக பலர் விளக்கம் கேட்டு வருகின்றனர்.
 இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:
 பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு ஆசிரியர் டிப்ளமோ பட்டத்தையும், அதன் பிறகு பி.லிட். பட்டமும் பெற்றவர்கள் முதல் தாளையும், இரண்டாம் தாளையும் எழுதலாம்.
 பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு பி.லிட். பட்டமும், புலவர் பயிற்சியும் முடித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம்.
 இணையதளத்தில் வெளியீடு: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் எளிய வினா, விடை அமைப்பிலான தகவல்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இவை வெளியிடப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday, March 7, 2012

தமிழக உயர்கல்வித் துறையில் மைக்ரோசாப்ட் முதலீடு-07-03-2012


சென்னை: 
உயர்கல்வியில், தகவல் தொழில்நுட்பம் அல்லாத, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு திட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்த உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதாவிடம், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் தெரிவித்தார்.
பாராட்டு: சர்வதேச மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் ஜீன் பிலிப்பி கோர்டாய்ஸ், முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்தார். கல்வி, மின் ஆளுமை போன்ற துறைகளில் மேலும் முதலீடுகள் செய்வது தொடர்பாக பேச்சு நடத்தியதுடன், கல்வித் துறையில், தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டினார்.
கடந்த 2005ல், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தகவல் தொழில்நுட்பக் கல்வியை அளிப்பது தொடர்பாக, தமிழக அரசுடன், மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை, அவர் நினைவுபடுத்தினார். மேலும், &'உயர்கல்வியில், தகவல் தொழில்நுட்பம் அல்லாத, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துதல்; தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்; மற்ற ஆசிரியர்களுக்கு, அவர்கள் பயிற்சி அளித்தல்; உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களை, தொழில்முனைவோர் ஆக்குதல்; புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்; கிளவுடு கம்ப்யூட்டிங் மையங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை, மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்படுத்த விரும்புகிறது,&' என, அதன் தலைவர் தெரிவித்தார்.
முதல்வர் உறுதி: பயிற்சி திட்டங்கள் மற்றும் கிளவுடு கம்ப்யூட்டிங் மையங்கள் ஆகியவற்றில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட, அனைத்து உதவிகளையும் செய்வதாக, முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார். இந்திய மைக்ரோசாப்ட் தலைவர் பாஸ்கர் பிரமநாயக்; இயக்குனர்கள் ரன்பீர் சிங், பிரதிக் மேத்தா; வர்த்தக மேலாளர் ஆலன் ஆகியோர் உடனிருந்தனர்.

முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு ஜுன் 3ல் நடக்கிறது


சென்னை: 


கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, தமிழகத்தில், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, ஜூன் 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், 22ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
* கடந்த 2010, ஆக., 23ம் தேதிக்குப் பின், அரசு, அரசு நிதியுதவி, தனியார் என எந்தப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவரானாலும், ஆசிரியர் தகுதித் தேர்வை கண்டிப்பாக எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.
* ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர் வேலைக்கு வர வேண்டும் என விரும்புபவர்களில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் என, இரு வகையினரும் இத்தேர்வை எழுத வேண்டும்.
* இடைநிலை ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதல் தாள் தேர்வையும்; பட்டதாரி ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் மற்றும் இந்தப் பணிக்கு வர விரும்புபவர்கள், இரண்டாம் தாள் தேர்வையும் எழுத வேண்டும்.
* இடைநிலை மற்றும் பட்டதாரி என, இரு வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் இரு வகுப்புகளுக்கும் சேர்த்து பணி செய்ய விரும்புபவர்கள், இரு தேர்வுகளையும் எழுத வேண்டும்.
* கேள்விகள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில், Objective முறையில் இருக்கும். தலா, 150 மதிப்பெண்களுக்கான தேர்வில், தேர்ச்சி பெற, 60 சதவீத மதிப்பெண்கள் (90) பெற வேண்டும்.
* விண்ணப்பம் விலை, 50 ரூபாய்; தேர்வுக் கட்டணம், 500 ரூபாய். இரு தாள் தேர்வுகளை சேர்த்து எழுதவும், 500 ரூபாய் கட்டணமே போதுமானது.
* ஏப்., 4ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 3ம் தேதி, தகுதித் தேர்வு நடைபெறும்.
* ஆறு லட்சம் பேர் தேர்வு எழுதுவர் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனினும், ஏழு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு

1. குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை 30 மதிப்பெண்
2. மொழித்தாள் -1(கற்பிக்கும் மொழி) 30 மதிப்பெண்
3. மொழித்தாள் -2(விருப்ப மொழி) 30 மதிப்பெண்
4. கணிதம் 30மதிப்பெண்
5.சுற்றுச்சூழலியல் 30 மதிப்பெண்

இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு

1. குழந்தைகள் மேம்பாடு மற்றும்
கற்பித்தல் முறை (கட்டாயம்) 30 மதிப்பெண்
2. மொழித்தாள் - 1(கட்டாயம்) 30 மதிப்பெண்
3. மொழித்தாள் - 2(கட்டாயம்) 30 மதிப்பெண்
4. (அ) கணிதம் மற்றும் அறிவியல்
(கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
(ஆ) சமூகவியல் -(சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) 60 மதிப்பெண்
(இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது.



பள்ளிகளில் துப்புரவாளர், காவலர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு-07-03-2012


சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், துப்புரவாளர் மற்றும் காவலர்கள், 5,000 பேரை பணி நியமனம் செய்ய, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
5,000 பணியிடங்கள்: பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்ட அரசாணை: கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் உள்ளிட்ட இதர பணிகளுக்காக, ஆசிரியர் அல்லாத, 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, மாணவர் எண்ணிக்கை, 500க்கும் குறைவாக உள்ள, 998 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, தலா ஒரு பணியிடமும்; 500க்கும் அதிகமாக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட, 996 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும், 1,005 மேல்நிலைப் பள்ளிகளுக்கும், தலா இரண்டு பணியிடம் என, ஆசிரியர் அல்லாத மொத்தம், 5,000 பணியிடங்களை அனுமதிக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் கோரியிருந்தார்.
ஊதிய விவரம்
இதை ஆய்வுசெய்த தமிழக அரசு, 998 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு துப்புரவு பணியிடத்தை ஏற்படுத்தி, 1,300 - 3,000 ரூபாய் மற்றும் தர ஊதியம் 300 ரூபாய் என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில், இவர்கள் நியமிக்கப்படுவர். மேலும், 996 உயர்நிலைப் பள்ளிகள், 1,005 மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தலா ஒரு துப்புரவாளர் மற்றும் ஒரு காவலர் பணியிடமும் ஏற்படுத்தி, அரசு உத்தரவிடுகிறது. காவலர்கள், 4,800 - 10 ஆயிரம் ரூபாய் மற்றும் தர ஊதியம் 1,300 ரூபாய் என்ற காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்படுவர். இவ்வாறு சபீதா தெரிவித்துள்ளார்.
தேர்வு எப்படி?
அரசு அறிவித்துள்ள 5,000 பணியிடங்களும், மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்றவாறு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள், மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின்படி, நிரப்பப்படும். &'ரெகுலர்&' அடிப்படையிலான இந்த பணியிடங்களுக்காக, ஆண்டுக்கு, 60 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும் என, செயலர் தெரிவித்தார்.
இரு பணிகளுக்கும், எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் கிடையாது; படித்திருந்தால் போதுமானது என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மார்ச் 8ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு - மாணவர்களுக்கு எச்சரிக்கை-07-03-2012




பொதுத் தேர்வுகளில், மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் எச்சரித்தார்.
கடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 184 மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.
நாளை ஆரம்பம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(மார்ச்8) முதல், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன. இரு மாநிலங்களிலும் சேர்த்து, ஏழு லட்சத்து, 60 ஆயிரத்து, 975 மாணவர்கள் தேர்வை எழுத, 1,974 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
தலைநகர் சென்னையில், 412 பள்ளிகளில் இருந்து, 50 ஆயிரத்து, 201 மாணவர்கள், 139 மையங்களிலும்; புதுச்சேரியில், 105 பள்ளிகளில் இருந்து, 12 ஆயிரத்து, 42 மாணவர்கள், 31 மையங்களிலும் தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வுத்துறை எச்சரிக்கை: பிளஸ் 2 பொதுத் தேர்வில், ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்களில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த மையங்களை அடிக்கடி கண்காணிக்க, அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட தேர்வுக்குழுவில், கல்வித்துறை அலுவலர்களும் சேர்ந்து செயல்படுவர்.
கண்காணிப்பு குழு: ஒரு சில மையங்களில், நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்வு துவங்கியதில் இருந்து, முடியும்வரை அங்கேயே தங்கியிருந்து கண்காணிப்பர். 4,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய, பறக்கும் படை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இயற்பியல், கணிதம், விலங்கியல், வேதியியல், உயிரியல் மற்றும் தாவரவியல் ஆகிய, ஆறு பாடங்களுக்குரிய தேர்வின்போது, வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வை நடத்துவர். இதுதவிர, அண்ணா பல்கலையைச் சேர்ந்த அலுவலர்களும், தேர்வு மையங்களை பார்வையிடுவர்.
184 பேருக்கு தண்டனை: துண்டுத்தாள் வைத்திருத்தல், அதைப்பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாளை மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் செய்தல் போன்றவை, கடும் குற்றங்களாக கருதப்படும். கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட, 184 மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
சிறப்பு அம்சங்கள்
* இந்த ஆண்டில் இருந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கூடுதல் ரகசியக் குறியீடு மற்றும் புகைப்படங்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
* ஆள் மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில், தேர்வர்களுடைய புகைப்படங்கள், பெயர் பட்டியலிலும், ஹால் டிக்கெட்டிலும் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளன.
* அனைத்து பாட தேர்வுகளின்போதும், தமிழ் வழி கேள்விகளுடன், ஆங்கில வழி கேள்விகளும், ஒரே தாளில் இடம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், வரலாறு, வணிகவியல், பொருளியல், கணக்கியல் ஆகிய பாடங்களுக்கு, சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய மொழிகளிலும், கேள்வித்தாள் இடம் பெற்றிருக்கும்.
* சென்னை புழல் மற்றும் வேலூர் மத்திய சிறைகளில், 49 சிறைவாசிகள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
தேர்வெழுதும் மாணவர்கள் விவரம்
* பள்ளிகள் எண்ணிக்கை: 5,557
* மொத்த மாணவர்கள்: 7,60,975
* மாணவர்கள்: 3,53,006
* மாணவிகள்: 4,07,969
* மாணவிகள் கூடுதல்: 54,963
* 2011ஐ விட மொத்த கூடுதல்: 37,403
* தனித்தேர்வு மாணவர்கள்: 61,319